Wednesday 29 June 2016

முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே.! -செல்வி.ஜோதிமணி




"இந்து ,பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான, சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும்) எதிராக வெகுண்டெழுந்தவர் .

பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள், வன்முறைகள், தாக்குதல்கள் நிலவி வந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக் கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில், கலவர பூமியான அரேபியப் பாலைவனத்தில் அமைதியை ஏற்படுத்தியவர்.

கிறித்தவர்கள் இந்த கூட்டமைப்பில் சேர்ந்த பொழுது, மதம் மாறாமலேயே அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளித்தவர். அவர்களை இஸ்லாம் 'People of the book' (Bible ) என்று அவர்களது சொந்த அடையாளங்களுடனே அங்கீகரிக்கிறது.

ஒரே ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தைத் தவிர வன்முறையை முன்னிருத்தாதவர். மெதினாவிலிருந்து மெக்காவுக்கு தனது மக்களோடு உயிருக்கு ஆபத்தான சூழலில் நிராயுதபாணியாகச் சென்று போரில் வெல்லமுடியாத மெக்கா மக்களை வென்றெடுத்தவர்.

வன்முறையை அல்ல, அமைதியை, பேரன்பை, கருணையை, சமதர்மத்தை முன்னிருத்தியவர். ஜிகாத்-புனிதப்போருக்கு இஸ்லாத்தில் எந்த இடமும் இல்லை .

பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive ) இருக்கிறது.

இன்று மத அடிப்படை வாதிகள் முன்னிருத்துகிற இஸ்லாத்துக்கும், உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாலிபான்களும், ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொடூரமான அமைப்புகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிற அட்டூழியங்களும், அவற்றையே உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று விமர்சிப்பதுபோல் சித்தரிக்கும் போக்கும் ஆபத்தானது .

உண்மையான முஸ்லிம்களுக்கு அதை எதிர்த்து நிற்கவேண்டிய சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க்கிறது. இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது. மதத்தை (எந்தமதமானாலும்) அரசியல், பொருளாதார சுயநலனில் இருந்து விடுவிப்பதிலே தான் இந்த உலகின் அமைதி அடங்கியிருக்கிறது.
 
 
நன்றி: செல்வி. ஜோதிமணி

Thursday 16 June 2016

மனிதர்களில் சிறந்தவர் யார்..?





“மனிதர்களில் சிறந்தவர் யார்..?” என முஹம்மது நபியவர்களிடம் வினவப்பட்டது.

நபியவர்கள் கூறினார்கள்: “எவர் ‘மக்முமுல் கல்பு’ [தூய இதயம்] கொண்டவராய், ‘சதூகுல் லிஸான்’ [உண்மை நாவு] கொண்டவராய் இருக்கின்றாரோ அவர் தாம்..! [மக்களில் சிறந்தவர் ஆவார்].”

“‘சதூகுல் லிஸான்’ உண்மையை மட்டுமே பேசுபவர் என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் ‘மக்முமுல் கல்பு’ [தூய இதயம்] கொண்டவர் என்றால் என்ன.? எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லையே, அதனைத் தெளிவுப் படுத்துங்களேன்.!” என்று மக்கள் கேட்டார்கள்.

நபிகளார்[ஸல்] அவர்கள் கூறினார்கள்: ”‘மக்முமுல் கல்பு’ [தூய இதயம்] கொண்டவர் என்றால், அவர் தூய்மையான உள்ளத்தைக் கொண்டவர். அவருடைய உள்ளத்தில் பாவத்தின் எந்தவொரு சுமையும் இருக்காது. சகமனிதன் மீது கொடுமை புரிதல், உரிமைப்பறிப்பு, வரம்பு மீறுதல் போன்ற பாரங்களும் இருக்காது. அவருடைய உள்ளத்தில் மற்றவர்களைப் பற்றி எத்தகைய கசடோ, தூசோ, [வெறுப்போ,குரோதமோ] பொறாமையோ இருக்காது.!”



அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு [ரலி]

நூல்: இப்னு மாஜா, பைஹகி.


[][][]

ஜுலைபிப் (ரலி)





அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் 
வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை.
அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும்
வெளித்  தோற்றங்களை பார்ப்பதில்லை.



அருமை சஹாபி ஜுலைபிப் (ரலி) அவர்களின் வரலாறு, இதற்கு பெரும் சான்று. ஜுலைப் என்கிற பெயரில் அர்த்தமே 'சின்ன சட்டை' என்பது தான் போர்க்களத்தில் நின்று அவர் இஸ்லாத்திற்காக போரிட்ட போது, வாளின் உயரம் கூட அவர் இல்லையாம்.(சுபுஹானல்லாஹ்)

குட்டையான மனிதர் மட்டுமல்ல, முகம் கோணலான மனிதரும் கூட ஆனால் நபியவர்கள் "ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" என்று சொல்கிற அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். இதுபோன்ற குட்டையர்களை கேலி பண்ணுவதுதான் உலக வழக்கம், 'மூஞ்சியையும் உயரத்தையும் பாரு..!' என்று.

நபி (ஸல்) அவர்கள் ஜுலைபிற்காக பெண் கேட்க போனார்கள். அதுவும் மதீனத்து பிரமுகர்கள் திருமணம் செய்ய போட்டி போடும் அழகான பெண்ணை. முதலில் நபியவர்கள் பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னதை நபிகளார் தமக்காகவே கேட்டு வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்ட பெண்ணின் தந்தை முகம் மலர்ந்தார். ஆனால் ஜுலைபிப்புக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று பெருமானார் சொன்னவுடன் அதிர்ந்து போன அந்தத் தந்தை தம் மனைவியிடம் ஆலோசனை செய்வதாக சொல்லி நழுவினார்.

அப்பெண்ணின் தாயாரிடம் விஷயத்தை சொன்ன போது, ஜுலைபிப்புக்கு தன் மகளை கொடுப்பது பற்றி தாம் நினைத்து கூட பார்க்க முடியாது என்று சொன்னார். மனைவியின் கருத்தை நபிகளாரிடம் சொல்ல 
அந்தத் தந்தை
 முன் சென்ற போது அவரது மகள், தந்தையை இடைமறித்து விபரம் கேட்க, பெற்றோர் முழு விபரத்தையும் சொன்னார்.

ஊரே வெறுத்து ஒதுக்கும் ஜுலைபிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தான் தம்மை நபியவர்கள் பெண் கேட்டு வந்துள்ளார்கள் என்று தெரிந்தும் அப்பெண் தெளிவாக சொன்னார் "இறைதூதரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் என் கடமை. நான் ஜுலைபிப்பை மணமகனாக ஏற்கிறேன்" என்று கூறி அப்பெண் கீழ்க்காணும் குரானின் வசனத்தை ஓதி காண்பித்தார்.

"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை (அல்குர்ஆன்33:36).

அப்பெண்ணின் முடிவை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தித்தார்கள். 

தாம் திருமணம் முடிக்க நினைக்கும் ஆடவனிடத்தில் அவன் தலைமுடியையும், நிறத்தையும், செல்வத்தையும், அழகையும் பார்க்கும் அளவு கூட மார்க்கத்தை பார்க்காத நமக்கு மத்தியில் திருத்தூதரின் தேர்வு என்பதால் தம் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி ஜுலைபிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணமகனாக ஏற்ற அப்பெண்ணின் தியாகம் உண்மையில் அர்ப்பணிப்பின் உச்சகட்டம்.

ஒரு போர்களத்தில் நபியவர்கள் படையினரை பார்த்து அவர்கள் யாரையாவது போரில் இழந்து விட்டனரா என்று விசாரிக்க தாங்கள் யாரையும் இழக்கவில்லை என்று தோழர்கள் பதிலளித்தனர். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் ஜுலைபிப்பை இழந்து விட்டேன். அவரை களத்தில் தேடுங்கள்" என்றார்கள். தோழர்கள் சென்று தேடிய போது ஜுலைபிப் உதிரம் சொட்ட இறந்து கிடந்தார். அவரை சுற்றிலும் ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். ஏழு எதிரிகளை கொன்று ஜுலைபிப் ரளியல்லாஹு அன்ஹு ஷஹீதாகி கிடந்தார்.




[][][]

Wednesday 8 June 2016

முஹம்மது அவர்கள் குறித்து புத்தகம் எழுதிய மார்வாரி..



Inspired by the life of Prophet Muhammad a Hindu Marwari wrote a book on him

By Asma Khan,MM,


=====================================






Prophet Muhammad has always been an inspiration for millions of people, Rajeev Sharma, a Hindu youth is one of those inspired persons. Life of prophet Muhammad had such a great influence on Rajeev that he made up his mind for writing a biography about the Prophet in “Marwari” language. The name of the book is “Paigamber Ro Paigam”.

Rajeev Sharma was born in 1987, in Kolasiya ,a village in Jhunjhunu of Rajasthan. He started his own library in his village when he was in 9th standard. The library was known as “Gaon ka Gurukul”.

He has a habit of reading new books and this is how he got a chance to read about Prophet Muhammad. Although he had read numerous books but after reading about Muhammad, he got so heavily influenced that he couldn’t stop himself from writing a complete book on him. The language that he chose to write in was “Marwari “, a local language of Rajasthan. This is the first time that someone has written an original biography about the life of Prophet Muhammad in “Marwari” claims Rajeev Sharma.

He knew that writing a book about the life of Muhammad could create problems for him , but he went ahead fearlessly and completed the book .

The book says that there is only one God who has the supreme power. People call him Allah, bharwaan, ishwar and many other names. Irrespective of the names that are being taken by different people the God is one and only who holds the supreme power, that’s is Allah.

The writer of this book is so greatly influenced by such a great personality muhammad (swt) who was a messenger of God, that he decided to write this book on his life in one of the regional languages of Rajasthan region.



Rajeev Sharma







He mentions in the book that how much the “Prophet used to hate the practice of taking ‘interest’ (Byaj or Sood ) from people. It was very much disliked by Allah and so by him. The writer reminds of a incident in his own village where a priest who used to perform all the Hindu rituals that are supposed to occur at the time of marriages and other functions , the priest felt pride in lending the money to the poors on heavy ‘interest’ as because he knew that who took money from the him would never be able to re pay the amount even if they do so for next 20 years and would continue to pay the interest. The writer is greatly influenced by the unlawfulness of ‘ interest money’ in Islam and in the teachings of the Prophet.

Some of the teachings which moved the writer and made an impact on him are also mentioned in the book are given below precisely.

The Prophet fought for women’s empowerment. He also told people not to fight with each other and to keep calm and be happy with whatever Allah has provided us .

Prophet also told that “Allah wants to be gentle towards animals, they are the ones who cannot speak and neither express their pain. We should not exploit animals else Allah can punish us even more severely than what we could do with the animals”.

Prophet told “we should obey our parents and should never hurt them as Allah has created parents on earth who could take care of his children “.

It has also been narrated by the Prophet that heaven lies under the feet mother and so we should always give love, respect and obey her as the way to enter paradise is through her feet.

“Death is a reality and life is fake . Everybody who has taken birth on this earth has to go back again for the judgement day and has to face the death. We have been sent on earth for an examination for which we need to prepare ourselves well by doing the right deeds and following what has been instructed by Allah”.

“Paigambar Ro Paigam is already being appreciated by many. I have already received over 12,000 hits on my website for this. People across the globe have downloaded it,” says Mr Sharma . The book is available online but if he finds a good publisher, he is ready to print the book too.



[][][]

Monday 6 June 2016

தாயிப் நகரில் தாஹா நபிகள்- கவிக்கோ கவிதை.




நபிகள் பெருமான் -

இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !

[]

தட்டாமலேயே
திறந்த கதவு !

[]

தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

[]

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதை தான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம் தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன

இல்லை ..

பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

[]

கந்தல் அணிந்த – இந்தக்
கருணைநபி கையால் தான் 
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

[]

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடைக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

[]

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !
உயர்மறை மகுடி – இவர்
ஊதியதைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

[]

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

[]

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

[]

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !

விந்தை மனிதர் நீர்!

கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்
ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

[]

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

[]

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !

பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !

இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

[]

அதோ பாருங்கள் !

நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !

காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !

அவை கூட
மதம் மாறி விட்டன !
தாயிப் வாசிகளே !

கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?

கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !
ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது

எங்களின்
எழுதுகோல் வழியே !


[][][]